மௌனம்!

மெய்யான மௌனம்…
எதையும் வாய்திறந்து சொல்லாதிருப்பது அல்ல.
எவரிடமும், எதுவும் சொல்லவேண்டிய தேவையற்றிருப்பது!

~ஸ்வாமி | @PrakashSwamy

வரம்!

சொற்கள் உதிரி மலர்கள்.
கவிதை மலர்களின் கொத்து.
உரைநடை கதம்பச் சரம்.
பாடல் மலர் அலங்காரம்.
பதிகம் தொடுத்த மாலை.
அர்த்தம் சொல்லின் மணம்.
மௌனம் அர்ப்பணிப்பின் வரம்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அடங்கல்!

ஆழ்ந்த மௌனத்தின் சன்னிதியில்…
ஆனந்த அமுதை விழிகள் பருகும்
அமைதிச் சாறை செவிகள் அருந்தும்
அருளின் ஒலியை நாசிகள் உண்ணும்
அன்பின் வருடலில் விரல்கள் உறங்கும்
அசையும் தேவையற்று நாவும் அடங்கும்!

~ஸ்வாமி | @PrakashSwamy

Website Powered by WordPress.com.

Up ↑